இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர் கிழக்கில் முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் இயங்கி வருவதாக புரளிகளைக் கிளப்பிவந்த தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு தற்போது ஒரு புதுக்கதை கிடைத்திருக்கிறது.
மக்கள் விடுதலை இராணுவம் (Peoples Liberation Army- PLA) எனும் பெயரில் புதிய தமிழ் ஆயுதக் குழு ஒன்று கிழக்கு மாகாணத்தில் தோற்றம் பெற்றி ருக்கிறது என்பதே அந்த புதுக்கதை. வடக்குக் கிழக்கில் தமிழீழத்தை நிறுவு வதை அடிப்படையாகக் கொண்ட ஆயுதப் போராட்டம் ஒன்றை இக் குழு முன்னெ டுக்கத் திட்டமிட்டிருப்பதாக "த லண்டன் டைம்ஸ்' பத்திரிகை அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.
புலிகளுக்குப் பின்னர் இந்த நாட்டில் இன்னுமோர் ஆயுதப் போராட்டக் குழு தலைதூக்கிவிடக் கூடாது என்பதே அனை வரினதும் பிரார்த்தனையாக இருக்கையில் இவ்வாறானதொரு தகவல் வெளியாகியி ருப்பது நாட்டை நேசிக்கும் அனைவருக் குமே பெரும் அதிர்ச்சியை அளித்தி ருக்கிறது.
2009 மே மாதத்தில் விடுதலைப் புலி களுக்கு எதிரான போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுவிட்டதாக அரசாங் கம் உத்தியோகபூர்வமாக அறிவித்தபோதி லும், இதுவரை தமிழ் மக்களுக்கான உரிய அரசியல் தீர்வு வழங்கப்படவில்லை என் பதைக் காரணமாகக் கொண்டு வடக்குக் கிழக்கில் "ஜனநாயக சோசலிச தமிழீ ழத்தை' நிறுவுவதற்காகவே தாம் மீண்டும் ஓர் ஆயுதப் போராட்டத்தை துவங்கவிருப் பதாக பி.எல்.ஏ.வின் கிழக்கு மாகாண இராணுவப் பிரிவின் கொமாண்டர் என தன்னை அடையாளப்படுத்தும் கோணேஸ் என்பவர் டைம்ஸ் பத்திரிகையின் செய்தி யாளர் அந்தனி லொயிட்டுக்கு பேட்டி யளித்திருக்கிறார்.
பலஸ்தீன விடுதலை இயக்கத்துடனும் (பி.எல்.ஓ) இந்திய மாவோயிஸ்ட் குழுக் களுடனும் மட்டுமன்றி கியூளா நாட்டுட னும் நெருங்கிய தொடர்பைக் கொண் டுள்ள தமது இராணுவத்தில் 300 உறுப்பி னர்கள் இருப்பதாகவும் அண்மையில் வவுனியா நலன்புரி நிலையங்களிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழ் பொது மக்கள் மத்தியிலிருந்து 5000 பேரைத் தெரிவு செய்து தமது இராணுவத்தில் இணைத்துக் கொள்ளவுள்ளதாகவும் கோணேஸ் மேலும் தெரிவித்திருக்கிறார்.
""சுமார் 10 பேரைக் கொண்ட ஒரு குழு வினால் எமது இராணுவம் நிர்வகிக்கப்படு கிறது. எமது இராணுவத்தில் முன்னாள் புலி உறுப்பினர்களும் உள்ளனர். ஆனால் புலிகள் மிகவும் தீவிரவாத அமைப்பாகவே இயங்கி வந்தனர். அவர்கள் மக்களின் தேவைகளை முன்னிறுத்தாது தமது தேவைகளை மாத்திரம் முன்னிறுத்தியே போராடினர். நாங்கள் அப்படியல்ல. சோச லிச கொள்கையைக் கொண்டவர்கள். தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பல்வேறு குழுக்களையும் எம்மோடு ஒன்றிணைத்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.
நாங்கள் விடுதலைப் புலிகளை விடவும் அரசியல் ரீதியாக திறன்மிக்கவர்கள். பயங்கரவாதிகள் எனும் லேபல் எங்கள் மீதும் ஒட்டப்படுவதை தவிர்க்க வேண்டும் என்பதில் நாம் கவனமாக இருக்கிறோம். எங்களது எதிரி இலங்கை அரசாங்கம் தான். இலங்கை அரசுக்கு அழுத்தங்களை வழங்க சர்வதேச சமூகத்தின் உதவியை பெரிதும் எதிர்பார்க்கிறோம்.
நாம் அரசாங்கத்துக்குச் சொந்தமான நிர்வாக மற்றும் பொருளாதார இலக்குகள் மீதும் இராணுவ நிலைகள் மீதும் எதிர்காலத் தில் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டி ருக்கிறோம். அதிலும் குறிப்பாக விடுத லைப் புலிகள் இயக்கத்திலிருந்த பிரிந்து அரசோடு ஒட்டிக் கொண்டிருக்கும் கருணா அணியினருக்கு எதிராகவே எமது முதல் தாக்குதல் இடம்பெறும். அதற்கான தருணம் நெருங்கிவிட்டது'' என்றும் கோணேஸ் தனது செவ்வியில் தெரிவித்தி ருக்கிறார்.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளி யாகி மஹிந்தவா? பொன்சேகாவா? என அரசியல் களம் சூடு பிடித்திருக்கும் நிலை யில் திடீரென புதியதோர் ஆயுதக் குழு பற்றிய அறிவிப்பு வெளியானமை பலத்த சந்தேகத்தைத் தோற்றுவித்திருக்கிறது. அதுவும் கிழக்கு மாகாணத்தில் மிகவும் இரகசியமாக இயங்கிவருவதாகக் கூறப்ப டும் இந்த ஆயுதக் குழு பற்றிய தகவலை லண்டனைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் இலங்கைக்கு வந்து செய்தியாக்கி யிருப்பது, இதன் பின்னணியில் வெளி நாட்டு சக்திகள் உள்ளனவா எனும் கேள்வி யையும் நம்முள் எழுப்புகிறது.
இத்தகவல் வெளியானவுடனேயே அரசாங்கம் சார்பாக கருத்து வெளியிட்ட தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடகப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல ""இவர்கள் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். இராணுவ ரீதியாகவன்றி அரசியல் ரீதியா கவும் நிர்வாக ரீதியாகவும் அரசாங்கம் இவர்களைக் கையாண்டு வருகின்றது'' என ஒற்றை வரியில் பதிலளித்திருக்கிறார்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்போவதாகவும் வடக்குக் கிழக்கில் தமிழீழத்தை நிறுவ போராடப் போவதாக வும் கூறியுள்ள ஓர் ஆயுதக் குழு பற்றி அரசாங்கம் இவ்வாறு அசட்டையாக பதிலளித்திருப்பதும் பலத்த சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது. அரசாங்கமே இவ்வா றானதொரு புதிய ஆயுதக் குழுவை கட் டமைத்து தமது அரசியல் நலன்களுக்கு அவர்களை பயன்படுத்த முனைகின்றது எனும் குற்றச்சாட்டுக்களும் தற்போது மேலெழுந்துள்ளன.
இத் தகவல் வெளியான மறுதினம் பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை நடத்திய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., அரசாங்கமே இவ்வாறான ஆயுதக் குழு ஒன்றை உரு வாக்கி தனது அரசியல் எதிரிகளை அழித் தொழிக்க முற்படுவதாக தாம் சந்தேகிப்ப தாக குற்றம்சாட்டியிருந்தார். குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை தீர்த்துக் கட்டுவதற்கே அரசாங்கம் இந்தக் கதை யாடலைக் கட்டவிழ்த்துள்ளதாகவும் இல்லாவிடின் இந்தக் குழுவைக் கண்டு பிடித்து அவர்களை அழித்தொழிக்கும் பணியை அரசாங்கம் முன்னெடுக்க வேண் டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தி ருந்தார்.
மனோ கணேசன் மட்டுமன்றி புலி ஆதரவு சக்திகளும் இதே கருத்தையே வெளியிட்டுள்ளன. இதற்கு முன்னர் நடை பெற்ற பல்வேறு அரசியல் படுகொலைக ளுக்கு புலிகள் மேல் பழியைப் போட்டு தப்பிக் கொண்ட அரசாங்கம், புலிகள் இல்லாத சூழ்நிலையில் எதிர்காலத்தில் தமது அரசியல் எதிரிகளை அழிப்பதற்கே இவ்வாறானதொரு திட்டத்தை அரங் கேற்ற முற்படுகின்றது என்றும் புலி ஆதரவு இணையத்தளங்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.
இதேபோன்றுதான் இக் குழுவின் பின்னணியில் சில வெளிநாட்டு சக்திகள் இருக்க முடியும் எனும் சந்தேகங்களும் எழுகின்றன. இலங்கையில் நடைபெற்ற போரைப் பயன்படுத்தி இலாபம் அடைந்த சில நாடுகள் மீண்டும் இலங்கையில் ஆயுதக் கிளர்ச்சி ஒன்றைக் கட்டமைத்து அதில் குளிர்காய முற்படலாம் என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். ஈராக், ஆப்கா னிஸ்தான், பாகிஸ்தான் வரிசையில் இலங் கையிலும் மீண்டும் குண்டு வெடிப்புக்க ளையும் கொலைக் கலாசாரத்தையும் தூண்டிவிட்டு தமது மூக்கை நுழைக்கவும் சில சக்திகள் முயற்சிக்கக் கூடும். இல்லை யேல், வடக்குக் கிழக்கில் பொருளாதார ரீதியாக முதலீடுகளை மேற்கொண்டுள்ள சில நாடுகள் இவ்வாறானதொரு ஆயுதக் குழு இருக்கின்றது எனும் புரளியைக் கிளப்பி விடுவதன் மூலம் ஏனைய நாடுகள் கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்வ தையோ அல்லது கால்பதிப்பதையோ தடுப்பதற்கான வியூகமாகவும் இது இருக்கக் கூடும்.
எது எவ்வாறிருப்பினும், இவ்வாறான தோர் ஆயுதக் குழு பற்றிய தகவல் வெளி யாகி இரு வாரங்களாகின்ற நிலையில் அரசாங்கம் இது தொடர்பில் ஆக்கபூர்வ மான நடவடிக்கைகள் எதனையும் எடுத்த தாகத் தெரியவில்லை. கெஹலிய ரம்புக் வெலவின் கூற்றோடு மாத்திரம் அரசாங் கம் இதுபற்றிக் கருத்துக் கூறுவதைத் தவிர்த்துக் கொண்டது.
சுமார் 30 வருட காலமாக அசைக்கவே முடியாதிருந்த ஒரு பயங்கரவாத இயக் கத்தை அழித்தொழித்த இந்த அரசாங்கத் தினால் தற்போதைக்கு வெறும் 300 பேரை மாத்திரமே அங்கத்தவர்களாகக் கொண் டுள்ள பி.எல்.ஏ. இயக்கத்தை துடைத்தெ றிவது ஒன்றும் பெரிய காரியமல்ல. லண்டனிலிருந்து ஒரு பத்திரிகையாளர் இலங்கைக்கு வந்து கிழக்கு மாகாணத்தின் இரகசிய இடம் ஒன்றுக்குச் சென்று அதன் கொமாண்டரைச் சந்தித்து இதுபற்றி செய்தி வெளியிட முடியுமானால் பெரும் புலனாய்வுப் படையையே கொண்டுள்ள இலங்கை அரசினால் அதனைக் கண்ட றிவது முடியாத காரியமா என்ன?
எனவே, இலங்கை அரசு இது தொடர் பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படியயாரு குழு உண்மையாகவே கிழக்கில் இயங்குகிறதா இல்லையா எனும் சந்தேகத்தை அரசு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையேல் புலிகளை ஒழித்த வெற்றியை உரிமை கோருவதற்கான குறைந்தபட்ச தகுதி கூட இலங்கை அரசுக்கும் இராணுவத்திற்கும் இல்லாது போய்விடும்.
No comments:
Post a Comment