Thursday, September 30, 2010

தொழுதுவிட்டுப் போயிருப்பான்...!!


பாவக் கறைகளைப் போக்கிக் கொள்வதற்காகத்தான் நாம் பள்ளிவாசலுக்குச் செல்கிறோம். ஆனால் ஒரு சிலர் தம் மீது பாவக் கறைகளை அள்ளிப் பூசிக் கொள்ளவே பள்ளிவாசலுக்கு வருகிறார்கள் என்பதை நினைக்கையில் கவலையாகவிருக்கிறது.

கடந்த திங்கட் கிழமை கொழும்பிலுள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு லுஹர் தொழுகைக்காகச் சென்றிருந்தேன். தொழுதுவிட்டு வெளியே வந்து பார்த்தபோது பெறுமதி வாய்ந்த எனது காலணிகளைக் காணவில்லை.

பள்ளிவாசல் சிற்றூழியரிடம் சென்று முறையிட்டேன். `அதெல்லாம் சகஜமப்பா' என்ற பாணியில் கையை விரிக்க மாத்திரம்தான் அவரால் முடிந்தது.

"சில தினங்களுக்கு முன்னரும் இரண்டு சோடி காலணிகள் காணாமல் போய்விட்டன தம்பி. இது தொடர்ந்து நடக்கிறது" என்றார் அவர். அங்கு கூடி நின்றவர்களும் ஆளைப் பிடித்து `சாத்த' வேண்டும் என்றார்கள்.

ஆனால் எனக்கு மாத்திரம் அந்த இடத்தில் கோபம் வருவதற்கு பதிலாக ஒரு கவிதைதான் வந்தது.

"பள்ளிக்குத் தொழச் சென்றேன். செருப்பைக் காணவில்லை. தொழ வந்தவர்கள் திருடியிருப்பார்கள்...! இல்லை... இல்லை... திருட வந்தவன் தொழுதுவிட்டுப் போயிருப்பான்...!!"

எங்கேயோ எப்போதோ படித்த இந்தக் கவிதை எனக்குள் இப்போதும் பத்திரமாய் பதிந்திருக்கிறது... என் செருப்பும் திருட்டுப் போகும்வரை...

(இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்தால் என்ன தெரிகிறது....? இது ஒன்றும் செருப்பு விற்கும் கடையில்லை... தென்கொரியாவில் பார்க் எனும் 59 வயது செருப்புத் திருடனால் வீடுகளிலும் மத தலங்களிலும் ஹோட்டல்களிலும் திருடப்பட்ட 1700 சோடி செருப்புகள்தான் இவை... அப்பாடா...இதை விட நம்ம நாட்டு திருடர்கள் பரவாயில்லை போலும்...?)

Saturday, January 2, 2010

13உம் 17 உம்


ஜனாதிபதித் தேர்தல் களம் மெல்ல மெல்ல சூடுபிடிக்க ஆரம்பித்தி ருக்கிறது.

எதிர்பாராத கட்சித் தாவல்கள் அரசியல் அரங்கில் புதிய திருப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஜெனர லின் அரசியல் பிரவேசத்தால் கலக்கம் அடைந்திருக்கும் அரசு, பருப்பு முதல் பெற்றோல் வரை விலைகளைக் குறைத் துக் கொண்டிருக்கிறது. தேர்தல் வாக்குறு திகளோ மழையாகப் பொழிகின்றன.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்போம், இலஞ்ச ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம், பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்குவோம்... என் றெல்லாம் ஒருசாரார் வாக்குறுதிகளை அள்ளி வழங்க, பயங்கரவாதத்தை ஒழித் தோம், நாட்டை அபிவிருத்தி செய்தோம் என மற்றொரு சாரார் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அரசியலமைப்பு ஏற்பாடுகளின் அடிப்படையில் இந்த நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும் நிறை வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிப தியை தெரிவு செய்யும் இந்தத் தேர்தல், மேற்சொன்ன வாக்குறுதிகளுக்கும் பிரசா ரங்களுக்கும் அப்பாற்பட்டு, இந்நாட்டின் தேசிய பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வு பற்றிப் பேசுவதற்கான தருணம் என்பதை அனைவரும் வசமாக மறந்துபோய் விட்டி ருப்பதாகவே தெரிகிறது.

இதற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதி பதித் தேர்தல்களின்போது இந்நாட்டில் புலிகளின் செல்வாக்கு மேலோங்கி இருந் ததன் காரணமாக ஒவ்வொரு ஜனாதிபதி வேட்பாளரும் இனப்பிரச்சினை தொடர்பி லான தமது கொள்கைகளை முன்னிறுத்தி தனது பிரசாரங்களை முன்னெடுத்தது வழமை. ஆனால், இம்முறை புலிகளற்ற சூழ்நிலையிலும் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் பலமான அழுத்தங்களை வழங்கக்கூடிய சிறுபான்மை அரசியல் அணிகளற்ற நிலையிலும் இத் தேர்தல் நடைபெறுவதே தேசிய பிரச்சினைகளுக் கான முக்கியத்துவம் எதுவும் இதுவரை வெளிப்படுத்தப்படாமைக்கான காரணம் எனலாம்.

இருந்தபோதிலும், முப்படைகளின் தலைமை அதிகாரி பதவியிலிருந்து ஓய்வு பெற்று தான் அரசியலில் பிரவேசிப்பதாக அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட ஜெனரல் சரத் பொன்சேகா, தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் இந்நாட்டின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் 13 வது திருத்தத் சட்டத்திற்கும் அப்பால் (13 ++ ) செல்லத் தயாராக இருப்பதாகவும், 17வது திருத்தச்சட்டத்தில் குறிப்பிடப்பட் டுள்ள விடயங்களை அமுல்படுத்துவதற் கான ஏற்பாடுகளை மேற்கொள்வேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

13ம், 17ம் திருத்தச் சட்டங்கள் எனும் கதையாடல்கள் போர் நடைபெற்றுக் கெண்டிருந்த அல்லது போர் நிறுத்தம் அமுலில் இருந்த காலப்பகுதியில் தாரா ளமாக பேசப்பட்டவை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­வும் சமீப காலம் வரையும் 13ம் திருத்தச் சட்டம் பற்றிய சில முன்னெடுப் புக்களையும் மேற்கொண்டிருந்தார்.
குறிப் பாக இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் பொருட்டு போராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் நியமிக்கப்பட்ட சர்வ கட்சிக் குழுவானது 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான சில முன்மொழிவுகளை ஆராய்ந்து ஜனாதி பதியிடம் முதற்கட்ட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தது. இருந்தபோதிலும் அதில் சில திருத்தங்களை மேற்கொள்ளு மாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ பணித்ததற்கிணங்க மீண்டும் கூடி ஆராய் ந்த சர்வகட்சிக் குழு, 97 வீதமான பணிகளை முடிவுக்குக் கொண்டு வந்திருப்பதாக அறி வித்துள்ள போதிலும் இதுவரை இறுதி அறிக்கை வெளியிடப்படவில்லை.
இப்பின்னணியில்தான் இந்த ஜனாதி பதித் தேர்தல் காலத்தில் தேசியப் பிரச்சி னைகளுடன் இவ்விரு திருத்தச் சட்டங்கள் தொடர்பில் விளக்கங்களை நாம் கொண் டிருக்க வேண்டியது அவசியமாகிறது.

13ம் திருத்தச் சட்டம்

1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப் பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தினடி யாக 13வது திருத்தச் சட்டமானது அப் போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்த னவால் 1988ஆம் ஆண்டு பாராளுமன்றத் தில் சட்டமூலமாக நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவின் ஆலோசனையுடன் தயாரிக்கப்பட்ட இச்சட்டமானது மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்குவதையே பிரதான கருப்பொருளாக கொண்டுள்ளது.
மத்தியில் குவிந்து கிடக்கும் அதிகா ரங்களை மாகாண சபைகளுக்கு பகிர்வதன் மூலம் அவற்றை மேலும் பலமுள்ளதாக் குவதே இதன் நோக்கம்.
இருந்தபோதிலும் மாறி மாறி ஆட் சிக்கு வருகின்ற அரசாங்கங்கள், மத்தியிலே அதிகாரங்களைக் குவித்துவைப்பதிலேயே குறியாயிருக்கின்றன. சட்டம், ஒழுங்கு களைக் கட்டுப்படுத்துவதற்கான பொலிஸ் அதிகாரத்தையோ மக்களுக்கிடையில் காணிகளைப் பகிர்ந்தளித்தளிப்பதற்கான அதிகாரத்தையோ வழங்க அவை பின் நிற்கின்றன.

வடக்கு கிழக்கை முன்னிலைப்படுத்தி இத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் பார்க்கும்போது வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் பொலிஸாரை கூடு தலாக நியமித்து பொதுமக்களுக்கான பொலிஸ் சேவைகளை மேலும் விரிவுபடுத் தும் அதிகாரத்தை இது மாகாண சபைகளுக்கு வழங்குகிறது. இதேபோன்று வடக்கு கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை தடுக்கும் வகையிலான அதிகாரத்தையும் மாகாண சபைகள் கொண்டிருக்க முடியும். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் கிழக்கில் சிங்களவர் ஒருவரே ஆளுநராக நியமிக்கப்பட்டு கிழக்கு மாகாண சபை யின் சகல செயற்பாடுகளையும் கட்டுப் படுத்துபவராக அவரே விளங்குகிறார். இதனால்தான் அண்மைக்காலமாக கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஏனைய அமைச் சர்களும் ஆளுநரின் கை ஓங்கியிருப்பதாக முறைப்பாடுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், 22 வருடங்களுக்கு முன் நிறைவேற்றப்பட்ட 13 வது திருத்தச் சட்டமானது தற்போதைய சூழ்நிலையில் பொருத்தமற்றது எனும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதுடன் 13வது திருத்தத் திற்கு அப்பால் சென்று, ஒரு தீர்வைக் காண முயற்சிக்க வேண்டும் எனும் கோரிக் கைகளும் மேலெழுந்துள்ளன.

பெரும்பாலான சிங்கள முற்போக்கு அரசியல்வாதிகளும், த.தே.கூ, மு.கா. போன்ற சிறுபான்மை கட்சிகளும் இதே கருத்தையே முன்வைத்து வருகின்றன.
எனவேதான், மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கும் 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்து தல் அல்லது அதற்கு அப்பால் சென்று ஒரு தீர்வினைக் காணல் என்பது தற்போதைக்கு மிக அவசியமான ஒன்றாக மாறியிருக்கி றது என்பது மட்டும் உண்மை.

17ம் திருத்தச் சட்டம்

இதேபோன்றுதான் 1978 அரசியல மைப்பில் மேற்கொள்ளப்பட்ட 17வது திருத்தச்சட்டமானது நாட்டின் அரசியலில் முக்கிய இடத்தை வகிக்கிறது. 2001ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட இச் சட்டமானது பொலிஸ், நீதி, தேர்தல் மற்றும் பொதுச் சேவை என்பன அரசியல் தலையீடுகள் இன்றி சுயாதீனமா கச் செயற்பட வழிசமைக்கிறது. இதன் பொருட்டு பின்வரும் ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு அதற்கு அதிகாரம் வழங் குவதற்கு இத்திருத்தம் வழிவகுக்கிறது.

1. அரசியலமைப்புப் பேரவை
2. பொதுச் சேவை ஆணைக் குழு
3. தேர்தல் ஆணைக் குழு
4. நீதிச் சேவை ஆணைக் குழு
5. தேசிய பொலிஸ் ஆணைக் குழு

மேற்சொன்ன திருத்தமானது இலங் கையின் அரசியல் வரலாற்றில் மிக முக்கி யமானதொரு திருப்புமுனையில் பார்க்கப் படுகின்ற போதிலும் இவை இதுவரை நடைமுறைப்படுத்தப் படாமலிருப்பதே கவலைக்குரியது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணைக் குழுவை நியமிக்குமாறு தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றன. அதற்கப்பால் அரச சார்பற்ற நிறுவனங்களும் சில முற்போக்கு அரசியல் வாதிகளும் 17வது திருத்தத்திலுள்ள சகல ஆணைக் குழுக்களையும் நியமிக்க வேண் டும் என அரசுக்கு அவ்வப்போது அழுத் தங்களை வழங்கி வருகின்றன.

இருந்தபோதிலும், இது தொடர்பில் அரசாங்கம் எந்தவித பதிற்குறியையும் வழங்காது மெளனம் காத்தே வருகிறது. அவ்வாறு குறித்த ஆணைக்குழுக்கள் நிய மிக்கப்படுமானால், அரசியல் பழிவாங்கல் களுக்கு இடமிருக்காது. பதவியுயர்வு, ஆட் சேர்ப்புக்கள், நியமனங்கள் என்பன நேர்மை யாக நடைபெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். இனப் பிரச்சினைக்கு அப்பால், நாட்டில் நிலவும் ஊழல், மோசடி உள் ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முடிவுக் குக் கொண்டுவர 17 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது அவசியம்.

எனவேதான், மிக முக்கியமான வர லாற்றுப் பின்னணி கொண்ட இந்த ஜனா திபதித் தேர்தலில் வேட்பாளர்கள் இத் திருத்தச் சட்டங்கள் குறித்து கூடுதல் முக் கியத்துவம் கொடுத்தல் அவசியம். அத்து டன் வாக்காளர்களும் இவை பற்றிய போதிய விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும். வெறுமனே அபிவிருத்தி அல் லது சம்பள உயர்வு எனும் குறுகிய நோக் கங்களுக்கு அப்பால் இந்நாட்டின் தேசி யப் பிரச்சினைகளுக்கு தீர்வினைக் கொண் டுவரக் கூடிய மேற்சொன்ன விடயங்க ளுக்கு வேட்பாளர்களும் வாக்காளர்களும் கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என நம்புவோமாக!

வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு...!


கிழக்கு மாகாண மக்களுக்கும் அனர்த்தங்களுக்கும் அப்படி என்னதான் உறவோ தெரியவில்லை.

மூன்று தசாப்த கால யுத்த அனர்த்தம், ஐந்து வருடங்களுக்கு முன்னரான சுனாமி அனர்த்தம் என மிகப் பெரும் அனர்த்தங்களால் நொந்து போய் இருக்கும் அம் மக்கள் இன்று வெள்ளத்திலும் தத்தளிக்க வேண்டி ஏற்பட்டிருக்கிறது.

கடந்த 3 வார காலமாக கிழக்கில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் வடக்குக் கிழக்கு பருவப் பெயர்ச்சி மழை காரணமாக திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக 83,000 குடும்பங்களைச் சேர்ந்த 302,835 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கிறது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி உற வினர் வீடுகளிலும் பொது இடங்களிலும் தங்கி வருகின்றனர். இரண்டு வாரங்க ளுக்கு மேலாக இடம்பெயர்ந்து வேறு இடங்களில் தங்கியிருக்கும் இம் மக்களுக்கு உரிய நிவாரண உதவிகள் எதுவும் வழங்கப் படவில்லை எனும் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுகின்றன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் நஷ்டஈடுகளை வழங்க அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஊடகங்கள் மூலம் செய் திகள் வெளிவருகின்ற போதிலும், குறிப் பிடத்தக்க உதவிகள் எதுவும் எமக்குக் கிடைக்கவில்லை என மக்கள் முறைப்பாடு தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் பி.பி.சி. தமிழோசைக்கு கருத்துத் தெரி வித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாரா ளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் அரசாங்க அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் தொடர்பில் அக்கறையற்றிருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் கிழக்கு மாகாண அரசியல்வாதிகள் மஹிந்தவா? பொன்சேகாவா? என தேர்தல் பந்தயத்திலேயே அதிகம் ஆர்வம் காட்டிவருவதாகக் குறிப்பிடும் மக்கள், வெள்ள அனர்த்தத்தைப் பார்வை யிட்டு அதனைப் படம்பிடித்து பத்திரிகை களில் பிரசுரிப்பதில் காட்டும் ஆர்வத்தை இந்த அரசியல்வாதிகள் ஏன் நிவாரணப் பணிகளில் காட்டவில்லை என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

இதற்கிடையில் சுனாமி அனர்த்தத்தின் 5 ஆண்டு பூர்த்தியை நினைவு கூரக் காத்தி ருந்த கரையோரக் கிராம மக்களும் இம் முறை வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக் கப்பட்டுள்ளனர். சுனாமியால் பாதிக்கப் பட்டு இதுவரை நிரந்தர வீடுகள் கிடைக்காது தற்காலிக கொட்டில்களில் வாழ்ந்து வரும் கல்முனை பிரதேச செயலகப் பகுதிக் குட்பட்ட மக்கள் வெள்ளத்தினாலும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். மட்டுமன்றி சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத் திட்டங்கள் சிலவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கிழக்கில் இம் முறை வழமைக்கு மாறாக வெள்ளம் தேங்கி நிற்பதற்கு அங்கு மேற் கொள்ளப்பட்டு வரும் திட்டமிடப்படாத அபிவிருத்திப் பணிகளே காரணம் எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. கமநெகும திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப் பட்ட கொங்கிறீட் பாதைகள் வெள்ள நீர் வடிந்தோடுவதற்கு தடையாக இருப்பதாக வும் இந்த வீதிகளில் முறையான வடிகால மைப்பு வசதிகள் எதுவும் ஏற்படுத்தப்பட வில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு நாடெங்கும் பெரும் பீதியைக் கிளப்பியிருந்த டெங்குக் காய்ச்சல் மீண்டும் கிழக்கில் தலைதூக்கியுள்ளது. நீண்ட நாட்களாக வெள்ள நீர் தேங்கி நிற்பதன் காரணமாகவே மீண்டும் டெங்கு நுளம்புகள் பெருகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த வாரம் காத்தான்குடி பிரதேசத்தில் டெங்குக் காய்ச்சல் காரணமாக 10 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதனையடுத்து பாலர் பாட சாலைகள் மற்றும் குர்ஆன் மத்ரஸாக்களுக்கு விடுமுறை வழங்குமாறு சுகாதாரத் துறை அதிகாரிகளால் அறிவுறுத்தல் வழங்கப் பட்டுள்ளது.

எது எப்படியிருப்பினும், பாதிக்கப் பட்ட 3 இலட்சம் மக்களுக்கும் உரிய நிவா ரண உதவிகளை வழங்குவதோடு எதிர்வரும் காலங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்காத வாறு திட்டமிட்ட அபிவிருத்தி வேலைத் திட்டங்களை நடைமுறைப் படுத்துவதும் அரசாங்கத்தினதும் பிரதேச அரசியல்வாதி களதும் கடமையாகும்.

வெறுமனே தேர்தல் காலங்களில் மக்களின் வாக்குகளைக் குறியாகக் கொண்டு செயற்படும் அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து மக்களின் நலனைக் கருத்திற் கொண்ட வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் அரசியல்வாதிகளே சமூ கத்திற்குத் தேவை.

Wednesday, December 23, 2009

மை அடித்தல்






க.பொ.த. சா.தர பரீட்சை நேற்று நிறைவு பெற்ற போது அந்நாஸர் வித்தியாலயத்தில் பரீட்சை எழுதிய மாணவர்கள் தமது மகிழ்ச்சியை இப்படி 'மை' அடித்து வெளிப்படுத்தினார்கள்.......

Wednesday, December 16, 2009

Peoples Liberation Army ; உண்மையா? பூச்சாண்டியா?


இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர் கிழக்கில் முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் இயங்கி வருவதாக புரளிகளைக் கிளப்பிவந்த தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு தற்போது ஒரு புதுக்கதை கிடைத்திருக்கிறது.
மக்கள் விடுதலை இராணுவம் (Peoples Liberation Army- PLA) எனும் பெயரில் புதிய தமிழ் ஆயுதக் குழு ஒன்று கிழக்கு மாகாணத்தில் தோற்றம் பெற்றி ருக்கிறது என்பதே அந்த புதுக்கதை. வடக்குக் கிழக்கில் தமிழீழத்தை நிறுவு வதை அடிப்படையாகக் கொண்ட ஆயுதப் போராட்டம் ஒன்றை இக் குழு முன்னெ டுக்கத் திட்டமிட்டிருப்பதாக "த லண்டன் டைம்ஸ்' பத்திரிகை அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.

புலிகளுக்குப் பின்னர் இந்த நாட்டில் இன்னுமோர் ஆயுதப் போராட்டக் குழு தலைதூக்கிவிடக் கூடாது என்பதே அனை வரினதும் பிரார்த்தனையாக இருக்கையில் இவ்வாறானதொரு தகவல் வெளியாகியி ருப்பது நாட்டை நேசிக்கும் அனைவருக் குமே பெரும் அதிர்ச்சியை அளித்தி ருக்கிறது.

2009 மே மாதத்தில் விடுதலைப் புலி களுக்கு எதிரான போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுவிட்டதாக அரசாங் கம் உத்தியோகபூர்வமாக அறிவித்தபோதி லும், இதுவரை தமிழ் மக்களுக்கான உரிய அரசியல் தீர்வு வழங்கப்படவில்லை என் பதைக் காரணமாகக் கொண்டு வடக்குக் கிழக்கில் "ஜனநாயக சோசலிச தமிழீ ழத்தை' நிறுவுவதற்காகவே தாம் மீண்டும் ஓர் ஆயுதப் போராட்டத்தை துவங்கவிருப் பதாக பி.எல்.ஏ.வின் கிழக்கு மாகாண இராணுவப் பிரிவின் கொமாண்டர் என தன்னை அடையாளப்படுத்தும் கோணேஸ் என்பவர் டைம்ஸ் பத்திரிகையின் செய்தி யாளர் அந்தனி லொயிட்டுக்கு பேட்டி யளித்திருக்கிறார்.

பலஸ்தீன விடுதலை இயக்கத்துடனும் (பி.எல்.ஓ) இந்திய மாவோயிஸ்ட் குழுக் களுடனும் மட்டுமன்றி கியூளா நாட்டுட னும் நெருங்கிய தொடர்பைக் கொண் டுள்ள தமது இராணுவத்தில் 300 உறுப்பி னர்கள் இருப்பதாகவும் அண்மையில் வவுனியா நலன்புரி நிலையங்களிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழ் பொது மக்கள் மத்தியிலிருந்து 5000 பேரைத் தெரிவு செய்து தமது இராணுவத்தில் இணைத்துக் கொள்ளவுள்ளதாகவும் கோணேஸ் மேலும் தெரிவித்திருக்கிறார்.

""சுமார் 10 பேரைக் கொண்ட ஒரு குழு வினால் எமது இராணுவம் நிர்வகிக்கப்படு கிறது. எமது இராணுவத்தில் முன்னாள் புலி உறுப்பினர்களும் உள்ளனர். ஆனால் புலிகள் மிகவும் தீவிரவாத அமைப்பாகவே இயங்கி வந்தனர். அவர்கள் மக்களின் தேவைகளை முன்னிறுத்தாது தமது தேவைகளை மாத்திரம் முன்னிறுத்தியே போராடினர். நாங்கள் அப்படியல்ல. சோச லிச கொள்கையைக் கொண்டவர்கள். தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பல்வேறு குழுக்களையும் எம்மோடு ஒன்றிணைத்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.

நாங்கள் விடுதலைப் புலிகளை விடவும் அரசியல் ரீதியாக திறன்மிக்கவர்கள். பயங்கரவாதிகள் எனும் லேபல் எங்கள் மீதும் ஒட்டப்படுவதை தவிர்க்க வேண்டும் என்பதில் நாம் கவனமாக இருக்கிறோம். எங்களது எதிரி இலங்கை அரசாங்கம் தான். இலங்கை அரசுக்கு அழுத்தங்களை வழங்க சர்வதேச சமூகத்தின் உதவியை பெரிதும் எதிர்பார்க்கிறோம்.

நாம் அரசாங்கத்துக்குச் சொந்தமான நிர்வாக மற்றும் பொருளாதார இலக்குகள் மீதும் இராணுவ நிலைகள் மீதும் எதிர்காலத் தில் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டி ருக்கிறோம். அதிலும் குறிப்பாக விடுத லைப் புலிகள் இயக்கத்திலிருந்த பிரிந்து அரசோடு ஒட்டிக் கொண்டிருக்கும் கருணா அணியினருக்கு எதிராகவே எமது முதல் தாக்குதல் இடம்பெறும். அதற்கான தருணம் நெருங்கிவிட்டது'' என்றும் கோணேஸ் தனது செவ்வியில் தெரிவித்தி ருக்கிறார்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளி யாகி மஹிந்தவா? பொன்சேகாவா? என அரசியல் களம் சூடு பிடித்திருக்கும் நிலை யில் திடீரென புதியதோர் ஆயுதக் குழு பற்றிய அறிவிப்பு வெளியானமை பலத்த சந்தேகத்தைத் தோற்றுவித்திருக்கிறது. அதுவும் கிழக்கு மாகாணத்தில் மிகவும் இரகசியமாக இயங்கிவருவதாகக் கூறப்ப டும் இந்த ஆயுதக் குழு பற்றிய தகவலை லண்டனைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் இலங்கைக்கு வந்து செய்தியாக்கி யிருப்பது, இதன் பின்னணியில் வெளி நாட்டு சக்திகள் உள்ளனவா எனும் கேள்வி யையும் நம்முள் எழுப்புகிறது.
இத்தகவல் வெளியானவுடனேயே அரசாங்கம் சார்பாக கருத்து வெளியிட்ட தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடகப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல ""இவர்கள் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். இராணுவ ரீதியாகவன்றி அரசியல் ரீதியா கவும் நிர்வாக ரீதியாகவும் அரசாங்கம் இவர்களைக் கையாண்டு வருகின்றது'' என ஒற்றை வரியில் பதிலளித்திருக்கிறார்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்போவதாகவும் வடக்குக் கிழக்கில் தமிழீழத்தை நிறுவ போராடப் போவதாக வும் கூறியுள்ள ஓர் ஆயுதக் குழு பற்றி அரசாங்கம் இவ்வாறு அசட்டையாக பதிலளித்திருப்பதும் பலத்த சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது. அரசாங்கமே இவ்வா றானதொரு புதிய ஆயுதக் குழுவை கட் டமைத்து தமது அரசியல் நலன்களுக்கு அவர்களை பயன்படுத்த முனைகின்றது எனும் குற்றச்சாட்டுக்களும் தற்போது மேலெழுந்துள்ளன.

இத் தகவல் வெளியான மறுதினம் பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை நடத்திய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., அரசாங்கமே இவ்வாறான ஆயுதக் குழு ஒன்றை உரு வாக்கி தனது அரசியல் எதிரிகளை அழித் தொழிக்க முற்படுவதாக தாம் சந்தேகிப்ப தாக குற்றம்சாட்டியிருந்தார். குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை தீர்த்துக் கட்டுவதற்கே அரசாங்கம் இந்தக் கதை யாடலைக் கட்டவிழ்த்துள்ளதாகவும் இல்லாவிடின் இந்தக் குழுவைக் கண்டு பிடித்து அவர்களை அழித்தொழிக்கும் பணியை அரசாங்கம் முன்னெடுக்க வேண் டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தி ருந்தார்.

மனோ கணேசன் மட்டுமன்றி புலி ஆதரவு சக்திகளும் இதே கருத்தையே வெளியிட்டுள்ளன. இதற்கு முன்னர் நடை பெற்ற பல்வேறு அரசியல் படுகொலைக ளுக்கு புலிகள் மேல் பழியைப் போட்டு தப்பிக் கொண்ட அரசாங்கம், புலிகள் இல்லாத சூழ்நிலையில் எதிர்காலத்தில் தமது அரசியல் எதிரிகளை அழிப்பதற்கே இவ்வாறானதொரு திட்டத்தை அரங் கேற்ற முற்படுகின்றது என்றும் புலி ஆதரவு இணையத்தளங்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.

இதேபோன்றுதான் இக் குழுவின் பின்னணியில் சில வெளிநாட்டு சக்திகள் இருக்க முடியும் எனும் சந்தேகங்களும் எழுகின்றன. இலங்கையில் நடைபெற்ற போரைப் பயன்படுத்தி இலாபம் அடைந்த சில நாடுகள் மீண்டும் இலங்கையில் ஆயுதக் கிளர்ச்சி ஒன்றைக் கட்டமைத்து அதில் குளிர்காய முற்படலாம் என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். ஈராக், ஆப்கா னிஸ்தான், பாகிஸ்தான் வரிசையில் இலங் கையிலும் மீண்டும் குண்டு வெடிப்புக்க ளையும் கொலைக் கலாசாரத்தையும் தூண்டிவிட்டு தமது மூக்கை நுழைக்கவும் சில சக்திகள் முயற்சிக்கக் கூடும். இல்லை யேல், வடக்குக் கிழக்கில் பொருளாதார ரீதியாக முதலீடுகளை மேற்கொண்டுள்ள சில நாடுகள் இவ்வாறானதொரு ஆயுதக் குழு இருக்கின்றது எனும் புரளியைக் கிளப்பி விடுவதன் மூலம் ஏனைய நாடுகள் கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்வ தையோ அல்லது கால்பதிப்பதையோ தடுப்பதற்கான வியூகமாகவும் இது இருக்கக் கூடும்.

எது எவ்வாறிருப்பினும், இவ்வாறான தோர் ஆயுதக் குழு பற்றிய தகவல் வெளி யாகி இரு வாரங்களாகின்ற நிலையில் அரசாங்கம் இது தொடர்பில் ஆக்கபூர்வ மான நடவடிக்கைகள் எதனையும் எடுத்த தாகத் தெரியவில்லை. கெஹலிய ரம்புக் வெலவின் கூற்றோடு மாத்திரம் அரசாங் கம் இதுபற்றிக் கருத்துக் கூறுவதைத் தவிர்த்துக் கொண்டது.

சுமார் 30 வருட காலமாக அசைக்கவே முடியாதிருந்த ஒரு பயங்கரவாத இயக் கத்தை அழித்தொழித்த இந்த அரசாங்கத் தினால் தற்போதைக்கு வெறும் 300 பேரை மாத்திரமே அங்கத்தவர்களாகக் கொண் டுள்ள பி.எல்.ஏ. இயக்கத்தை துடைத்தெ றிவது ஒன்றும் பெரிய காரியமல்ல. லண்டனிலிருந்து ஒரு பத்திரிகையாளர் இலங்கைக்கு வந்து கிழக்கு மாகாணத்தின் இரகசிய இடம் ஒன்றுக்குச் சென்று அதன் கொமாண்டரைச் சந்தித்து இதுபற்றி செய்தி வெளியிட முடியுமானால் பெரும் புலனாய்வுப் படையையே கொண்டுள்ள இலங்கை அரசினால் அதனைக் கண்ட றிவது முடியாத காரியமா என்ன?

எனவே, இலங்கை அரசு இது தொடர் பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படியயாரு குழு உண்மையாகவே கிழக்கில் இயங்குகிறதா இல்லையா எனும் சந்தேகத்தை அரசு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையேல் புலிகளை ஒழித்த வெற்றியை உரிமை கோருவதற்கான குறைந்தபட்ச தகுதி கூட இலங்கை அரசுக்கும் இராணுவத்திற்கும் இல்லாது போய்விடும்.

Saturday, December 12, 2009

காக்கிச் சட்டையில் துவங்கி கதர்ச் சட்டைக்கு (இந்தியாவிலிருந்து வெளிவரும் சமரசம் சஞ்சிகையில் வெளிவந்த எனது கட்டுரை)










சூரிச்சிலும் சூடாகின கதிரைகள்...!


துரதிஷ்டவசமாக இலங்கையின் இன முரண்பாடு தொடர்பில் அவ்வப் போது அத்தி பூத்தாற்போல் நடை பெறும் பேச்சுவார்த்தைகளெல்லாம் கண்காணாத தொலைவிலுள்ள தேசங் களிலேயே நடந்து முடிந்து விடுகின்றன. பெரும் எதிர்பார்ப்புகளோடும் ஆரவா ரங்களோடும் தொடங்கும் மாநாடுகள், ஈற்றில், "பொது உடன்பாட்டுக்கு வர முடியவில்லை' எனும் மூன்று வார்த் தைக் கூற்றுடன் முடிவுக்கு வருவது வழமை.

அப்படித்தான் கடந்த நவம்பர் 19 முதல் 22 வரை சுவிட்சர்லாந்தின் தலை நகர் சூரிச்சில் நடைபெற்ற தமிழ்-முஸ்லிம் கட்சிகளின் மாநாடும் பெயர ளவு இணக்கப்பாட்டுடனும் தமிழ் பேசும் மக்களுடைய அரசியல் எதிர்கா லம் பற்றிய பொது உடன்பாட்டை எட்டாத நிலையிலும் முடிவடைந்தி ருக்கிறது.
தமிழர் தகவல் நடுவம் எனும் அமைப் பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாநாட்டில் இலங்கையின் தமிழ்-முஸ்லிம் கட்சிகளைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற 26 முக்கிய அரசியல்வாதி களும் சமூகப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

யார் இதனை ஏற்பாடு செய்திருக் கிறார்கள்? முக்கியமாக என்ன விடயங் கள் இங்கு பேசப்படப் போகின்றன? எனும் கேள்விகளுக்கு விடைதெரியாத நிலையிலேயே இம்மாநாடு ஆரம்பமா னது. தமிழர் தகவல் நடுவகத்தின் தலை வர் வி.வரதமகுமாரின் தலைமையில் இம்மாநாடு கூட்டப்பட்டிருந்தாலும் இங்கு கலந்துரையாடப்படும் என ஏலவே ஏற்பாட்டாளர்கள் தயாரித்திருந்த நிகழ்ச்சி நிரலின் பின்னணியில் மேற்கு நாடுகளின் ஆதிக்கம் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக இலங்கையில் நடைபெறப்போகின்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழ்-முஸ்லிம் கட்சிகள் யாரை ஆதரிப்பது? எனும் தலைப்பே இதில் முக்கிய இடம்வகித்ததா கவும் மாநாடு நடைபெற்ற காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளிவராத நிலையில் அது குறித்து விவா திப்பது அவசியமற்றது என பங்குபற்றுனர் கள் வலியுறுத்தியதன் காரணமாக அத் தலைப்பு கைவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஏற்பாட்டாளர்களால் ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருந்த நிகழ்ச்சி நிரல் கைவிடப்பட்டு, பங்குபற்றுனர்களா லேயே புதிய நிகழ்ச்சி நிரல் ஒன்று தயாரிக் கப்பட்டு விவாதிக்கப்பட்டுள்ளது. இடம் பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றல், அரசியல் தீர்வுத்திட்டம், அரசியல் கார ணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் சரணடைந்தவர்களை விடுவித்து புனர்வாழ்வளிப்பது ஆகிய மூன்று விட யங்கள் தொடர்பில் இங்கு முதற்கட்ட மாக ஆராயப்பட்டதாக அமைச்சர் டக் ளஸ் தேவானந்தா பி.பி.சி. தமிழோசைக் குத் தெரிவித்திருந்தார்.

இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற் றுவது தொடர்பாக கலந்துரையாடல் நடைபெறத் தொடங்கியவேளை, டிசம்பர் மாதத்தில் நலன்புரி நிலையங்களில் தங்கி யிருக்கும் சகல மக்களையும் சுதந்திரமாக நடமாட அனுமதி வழங்கப்படும் என இலங்கை அரசு அறிவித்ததையடுத்து இவ் விடயம் மேற்கொண்டு பேசப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் தமிழ் பேசும் மக்களின் அர சியல் உரிமைகளுக்கான இலக்கு என்ன? அதனை அடைவதற்கான நடைமுறைச் சாத்தியமான வழிவகைகள் என்ன? என்ற விடயத்திலும் இம் மாநாட்டில் பொது உடன்பாடு எட்டப்படவில்லை. அனைத் துக் கட்சிகளும் பொது உடன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் கட்சிகளின் தலைவர்கள் கையயாப்பம் இட்டு வெளியிடுவதாக இருந்த புரிந்துணர்வு உடன்பாடு ஈற்றில் அவர்கள் உடன்பாட்டுக்கு வரத்தவறிய தால் ஒரு வேலைத்திட்டத்திற்கான ஆவ ணமாக்கப்பட்டது. பின்னர் அந்த வேலைத் திட்டத்திற்கான ஆவணத்திலும் இலக்கு களை அடைவதற்கான நடைமுறைச்சாத்தி யமான வழிவகைகளில் உடன்பாடு எட் டப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இம்மாநாட்டில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வு என்ற இலக்கும் அதனை அடைவதற்கான நடைமுறைச் சாத்திய மான விடயங்கள் என்ற தலைப்பிலேயே பிரதான முரண்பாடு ஏற்பட்டதாக தெரி விக்கப்படுகிறது. இரண்டு தேசங்களைக் கொண்ட அரசு, இந்தியன் மொடல், சமஷ்டி என்ற விவாதங்களும் இங்கு இடம்பெற்றுள்ளன.

அதன் தொடர்ச்சியாக, தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீக ரிப்பது என்ற இலக்கை ஏற்றுக்கொள்வது பற்றிய மிகநீண்ட விவாதம் இடம்பெற்றுள் ளது. அதில் சிங்கள மக்களுக்குள்ள அதே உரிமை தமிழ் மக்களுக்கும் உண்டு என்றும் தென்பகுதி மக்களை அச்சப்பட வைக்கும் பதங்களைப் பயன்படுத்து உசித மானதல்ல என்றும் இலங்கை அரசுடன் இணக்கப்பா டான அரசியலை மேற்கொள்வதன் மூலமே தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினைக் கான தீர்வை எட்ட முடியும் எனவும் இங்கு ஒருசாரார் வலியுறுத்தியுள்ளனர்.

இச்சொல்லாடல் தொடர்பில் இன்னு மொரு சாரார் சுயநிர்ணய உரிமை என்ற பதத்தை உபயோகிக்க வேண்டும் எனவும் ஏனைய கட்சிகள் அச்சொல்லாடலை தவிர்க்க வேண்டு என்ற நிலையிலும் நீண்ட முடிவற்ற விவாதத்தை நடத்தியுள்ளன.

இடம்பெயர்ந்தவர்களின் மறுவாழ்வு, மீள்குடியேற்றம், காணாமல் போனவர்கள் பற்றிய விடயங்கள், உயர் பாதுகாப்பு வல யம், மக்களின் சுதந்திர நடமாட்டம் போன்ற விடயங்களில் பெரும்பாலும் உடன்பாடு காணப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் பேசும் மக்களுடைய அரசியல் எதிர்காலத்தின் இலக்கு, அதனை அடைவதற்கான நடை முறைச் சாத்தியமான வழிவகைகள் பற்றிய விடயமே மாநாட்டின் பெருமளவு நேரத்தை எடுத்திருந்தது. மாநாட்டின் இறுதி நாளின் இறுதி நிமிடங்கள் வரை இது தொடர்பாக உடன்பாடு எட்டப்படவில்லை.
விவாதங்கள் சில சமயங்களில் கடுமை யாக இருந்தபோதும் ஆரோக்கியமாக அமைந்ததாக கலந்து கொண்டோர் தெரி விக்கின்றனர். அரசியல் தீர்வுக்கான இலக்கு, அதனை அடைவதற்கான நடைமுறைச் சாத் தியமான வழிவகைகள் பற்றிய கருத்தொற் றுமை ஏன் எற்படவில்லை? என ஊடகவி யலாளர்கள் கேட்டதற்கு, எல்லா விடயங் களிலும் ஓரிரு நாட்களிலேயே கருத்தொற் றுமை ஏற்பட்டு விடும் என எதிர்பார்க்க முடி யாது என பங்குபற்றுனர்கள் பதிலளித் துள்ளனர்.

தமிழ் பேசுகின்ற தமிழ்-முஸ்லிம் கட்சி கள் சந்தித்த இந்நிகழ்வு குறிப்பிடத்தக்க நிகழ்வு என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள கட்சிகளின் தலைவர்கள் இம்மாநாட்டை பயனுள்ள ஒன்றாகவே தாங்கள் பார்ப்ப தாகத் தெரிவிக்கின்றனர்.
பல்வேறு முரண்பாடுகளைக் கொண்ட வர்கள் முதற் தடவையாக சந்தித்து ஒரு வருக்கொருவர் ஹலோ சொல்கின்ற சூழ் நிலை ஏற்பட்டுள்ளமை தமக்கு மகிழ்ச்சி யளிப்பதாக சில தமிழ் அரசியல் தலைவர் கள் இங்கு குறிப்பிட்டுள்ளனர். ஆனாலும் ஒரு ஹலோ சொல்வதற்கு ஆயிரக்கணக் கான டொலர்களை அள்ளியிறைக்க வேண்டுமா? அதையே இலங்கையில் செய்தால் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை களுக்கு அதுவே மிகப் பெரும் தீர்வாக அமைந்து விடுமே என்கிறார் நமது ஊடக நண்பர் ஒருவர்.