Saturday, December 12, 2009

சூரிச்சிலும் சூடாகின கதிரைகள்...!


துரதிஷ்டவசமாக இலங்கையின் இன முரண்பாடு தொடர்பில் அவ்வப் போது அத்தி பூத்தாற்போல் நடை பெறும் பேச்சுவார்த்தைகளெல்லாம் கண்காணாத தொலைவிலுள்ள தேசங் களிலேயே நடந்து முடிந்து விடுகின்றன. பெரும் எதிர்பார்ப்புகளோடும் ஆரவா ரங்களோடும் தொடங்கும் மாநாடுகள், ஈற்றில், "பொது உடன்பாட்டுக்கு வர முடியவில்லை' எனும் மூன்று வார்த் தைக் கூற்றுடன் முடிவுக்கு வருவது வழமை.

அப்படித்தான் கடந்த நவம்பர் 19 முதல் 22 வரை சுவிட்சர்லாந்தின் தலை நகர் சூரிச்சில் நடைபெற்ற தமிழ்-முஸ்லிம் கட்சிகளின் மாநாடும் பெயர ளவு இணக்கப்பாட்டுடனும் தமிழ் பேசும் மக்களுடைய அரசியல் எதிர்கா லம் பற்றிய பொது உடன்பாட்டை எட்டாத நிலையிலும் முடிவடைந்தி ருக்கிறது.
தமிழர் தகவல் நடுவம் எனும் அமைப் பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாநாட்டில் இலங்கையின் தமிழ்-முஸ்லிம் கட்சிகளைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற 26 முக்கிய அரசியல்வாதி களும் சமூகப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

யார் இதனை ஏற்பாடு செய்திருக் கிறார்கள்? முக்கியமாக என்ன விடயங் கள் இங்கு பேசப்படப் போகின்றன? எனும் கேள்விகளுக்கு விடைதெரியாத நிலையிலேயே இம்மாநாடு ஆரம்பமா னது. தமிழர் தகவல் நடுவகத்தின் தலை வர் வி.வரதமகுமாரின் தலைமையில் இம்மாநாடு கூட்டப்பட்டிருந்தாலும் இங்கு கலந்துரையாடப்படும் என ஏலவே ஏற்பாட்டாளர்கள் தயாரித்திருந்த நிகழ்ச்சி நிரலின் பின்னணியில் மேற்கு நாடுகளின் ஆதிக்கம் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக இலங்கையில் நடைபெறப்போகின்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழ்-முஸ்லிம் கட்சிகள் யாரை ஆதரிப்பது? எனும் தலைப்பே இதில் முக்கிய இடம்வகித்ததா கவும் மாநாடு நடைபெற்ற காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளிவராத நிலையில் அது குறித்து விவா திப்பது அவசியமற்றது என பங்குபற்றுனர் கள் வலியுறுத்தியதன் காரணமாக அத் தலைப்பு கைவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஏற்பாட்டாளர்களால் ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருந்த நிகழ்ச்சி நிரல் கைவிடப்பட்டு, பங்குபற்றுனர்களா லேயே புதிய நிகழ்ச்சி நிரல் ஒன்று தயாரிக் கப்பட்டு விவாதிக்கப்பட்டுள்ளது. இடம் பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றல், அரசியல் தீர்வுத்திட்டம், அரசியல் கார ணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் சரணடைந்தவர்களை விடுவித்து புனர்வாழ்வளிப்பது ஆகிய மூன்று விட யங்கள் தொடர்பில் இங்கு முதற்கட்ட மாக ஆராயப்பட்டதாக அமைச்சர் டக் ளஸ் தேவானந்தா பி.பி.சி. தமிழோசைக் குத் தெரிவித்திருந்தார்.

இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற் றுவது தொடர்பாக கலந்துரையாடல் நடைபெறத் தொடங்கியவேளை, டிசம்பர் மாதத்தில் நலன்புரி நிலையங்களில் தங்கி யிருக்கும் சகல மக்களையும் சுதந்திரமாக நடமாட அனுமதி வழங்கப்படும் என இலங்கை அரசு அறிவித்ததையடுத்து இவ் விடயம் மேற்கொண்டு பேசப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் தமிழ் பேசும் மக்களின் அர சியல் உரிமைகளுக்கான இலக்கு என்ன? அதனை அடைவதற்கான நடைமுறைச் சாத்தியமான வழிவகைகள் என்ன? என்ற விடயத்திலும் இம் மாநாட்டில் பொது உடன்பாடு எட்டப்படவில்லை. அனைத் துக் கட்சிகளும் பொது உடன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் கட்சிகளின் தலைவர்கள் கையயாப்பம் இட்டு வெளியிடுவதாக இருந்த புரிந்துணர்வு உடன்பாடு ஈற்றில் அவர்கள் உடன்பாட்டுக்கு வரத்தவறிய தால் ஒரு வேலைத்திட்டத்திற்கான ஆவ ணமாக்கப்பட்டது. பின்னர் அந்த வேலைத் திட்டத்திற்கான ஆவணத்திலும் இலக்கு களை அடைவதற்கான நடைமுறைச்சாத்தி யமான வழிவகைகளில் உடன்பாடு எட் டப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இம்மாநாட்டில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வு என்ற இலக்கும் அதனை அடைவதற்கான நடைமுறைச் சாத்திய மான விடயங்கள் என்ற தலைப்பிலேயே பிரதான முரண்பாடு ஏற்பட்டதாக தெரி விக்கப்படுகிறது. இரண்டு தேசங்களைக் கொண்ட அரசு, இந்தியன் மொடல், சமஷ்டி என்ற விவாதங்களும் இங்கு இடம்பெற்றுள்ளன.

அதன் தொடர்ச்சியாக, தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீக ரிப்பது என்ற இலக்கை ஏற்றுக்கொள்வது பற்றிய மிகநீண்ட விவாதம் இடம்பெற்றுள் ளது. அதில் சிங்கள மக்களுக்குள்ள அதே உரிமை தமிழ் மக்களுக்கும் உண்டு என்றும் தென்பகுதி மக்களை அச்சப்பட வைக்கும் பதங்களைப் பயன்படுத்து உசித மானதல்ல என்றும் இலங்கை அரசுடன் இணக்கப்பா டான அரசியலை மேற்கொள்வதன் மூலமே தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினைக் கான தீர்வை எட்ட முடியும் எனவும் இங்கு ஒருசாரார் வலியுறுத்தியுள்ளனர்.

இச்சொல்லாடல் தொடர்பில் இன்னு மொரு சாரார் சுயநிர்ணய உரிமை என்ற பதத்தை உபயோகிக்க வேண்டும் எனவும் ஏனைய கட்சிகள் அச்சொல்லாடலை தவிர்க்க வேண்டு என்ற நிலையிலும் நீண்ட முடிவற்ற விவாதத்தை நடத்தியுள்ளன.

இடம்பெயர்ந்தவர்களின் மறுவாழ்வு, மீள்குடியேற்றம், காணாமல் போனவர்கள் பற்றிய விடயங்கள், உயர் பாதுகாப்பு வல யம், மக்களின் சுதந்திர நடமாட்டம் போன்ற விடயங்களில் பெரும்பாலும் உடன்பாடு காணப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் பேசும் மக்களுடைய அரசியல் எதிர்காலத்தின் இலக்கு, அதனை அடைவதற்கான நடை முறைச் சாத்தியமான வழிவகைகள் பற்றிய விடயமே மாநாட்டின் பெருமளவு நேரத்தை எடுத்திருந்தது. மாநாட்டின் இறுதி நாளின் இறுதி நிமிடங்கள் வரை இது தொடர்பாக உடன்பாடு எட்டப்படவில்லை.
விவாதங்கள் சில சமயங்களில் கடுமை யாக இருந்தபோதும் ஆரோக்கியமாக அமைந்ததாக கலந்து கொண்டோர் தெரி விக்கின்றனர். அரசியல் தீர்வுக்கான இலக்கு, அதனை அடைவதற்கான நடைமுறைச் சாத் தியமான வழிவகைகள் பற்றிய கருத்தொற் றுமை ஏன் எற்படவில்லை? என ஊடகவி யலாளர்கள் கேட்டதற்கு, எல்லா விடயங் களிலும் ஓரிரு நாட்களிலேயே கருத்தொற் றுமை ஏற்பட்டு விடும் என எதிர்பார்க்க முடி யாது என பங்குபற்றுனர்கள் பதிலளித் துள்ளனர்.

தமிழ் பேசுகின்ற தமிழ்-முஸ்லிம் கட்சி கள் சந்தித்த இந்நிகழ்வு குறிப்பிடத்தக்க நிகழ்வு என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள கட்சிகளின் தலைவர்கள் இம்மாநாட்டை பயனுள்ள ஒன்றாகவே தாங்கள் பார்ப்ப தாகத் தெரிவிக்கின்றனர்.
பல்வேறு முரண்பாடுகளைக் கொண்ட வர்கள் முதற் தடவையாக சந்தித்து ஒரு வருக்கொருவர் ஹலோ சொல்கின்ற சூழ் நிலை ஏற்பட்டுள்ளமை தமக்கு மகிழ்ச்சி யளிப்பதாக சில தமிழ் அரசியல் தலைவர் கள் இங்கு குறிப்பிட்டுள்ளனர். ஆனாலும் ஒரு ஹலோ சொல்வதற்கு ஆயிரக்கணக் கான டொலர்களை அள்ளியிறைக்க வேண்டுமா? அதையே இலங்கையில் செய்தால் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை களுக்கு அதுவே மிகப் பெரும் தீர்வாக அமைந்து விடுமே என்கிறார் நமது ஊடக நண்பர் ஒருவர்.

No comments:

Post a Comment