Monday, August 3, 2009

புலிகளற்ற தேசத்தில் சுஹதாக்கள் தினம்!


வருடாந்தம் ஆகஸ்ட் 3 ஆம் திகதி தேசிய சுஹதாக்கள் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. ஆனாலும் இந்த வருடம் அனுஷ்டிக்கப்படுகின்ற சுஹதாக்கள் தினத்திற்கும் இதற்கு முன்னர் அனுஷ்டிக்கப்பட்ட சுஹதாக்கள் தினங்களுக்குமிடையே ஒரு பெரிய வித்தியாசம் இருக்கின்றது.
இலங்கை முஸ்லிம்கள் சுஹதாக்கள் தினம் என ஒரு நாளைப் பிரகடனப்படுத்தி அதனை வருடாந்தம் அனுஷ்டித்துவர வேண்டியதற்குக் காரண கர்த்தாக்களாயிருந்த விடுதலைப் புலிகள் இயக்கம் இன்று நம்மத்தியில் இல்லை என்பதே அந்த வித்தியாசமாகும்.

1980 களின் பின்னர் வடக்கு கிழக்கில் புலிகள் கட்டவிழ்த்துவிட்ட ஆயுதக் கலாசாரம் இதுவரை சுமார் 7000 இற்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் உயிரைக் குடித்திருக்கிறது. இவை எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பு வைத்தாற்போல அமைந்ததுதான் காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையாகும். 1990 ஆகஸ்ட் 3 ஆம் திகதி காத்தான்கடி மீரா ஜும்ஆ பள்ளிவாசல், ஹுசைனியா தைக்கா என்பவற்றில் இஷா தொழுகையில் ஈடுபட்டிருந்த 103 முஸ்லிம்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அல்லாஹ்வின் இல்லத்தினுள் வைத்து பாசிசப் புலிகளால் அரங்கேற்றப்பட்ட இந்தக் கொடூரம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சர்வதேச ரீதியில் கூட இலங்கை முஸ்லிம்கள் குறித்துப் பேசப்படுமிடங்களிலெல்லாம் காத்தான்குடிப் பள்ளிவாசல் படுகொலையும் ஞாபகப்படுத்தப்படுமளவு இச் சம்பவம் வரலாற்றில் இரத்தக் கறைகளால் பதியப்பட்டிருக்கிறது.

இந்நிலையில்தான் காத்தான்குடியை மையமாகக் கொண்டு இயங்கிவரும் முஸ்லிம் தேச சுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனம் ஆகஸ்ட் 3 ஆம் திகதியை தேசிய சுஹதாக்கள் தினமாகப் பிரகடனப்படுத்தி ஞாபகார்த்த நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.

கத்தமுல் குர்ஆன், அன்னதானம், சுஹதாக்களின் குடும்பங்களுக்கு உதவிகளை வழங்குதல், சுஹதாக்கள் நினைவுச் சொற்பொழிவு என வருடாந்தம் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பிட்ட சில வருடங்களில் மாத்திரம் மிகப் பிரமாண்டமான அளவில், தேசிய, சரவதேச ஊடக கவனயீர்ப்புகளுடன் சுஹதாக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது. அதன்போது நாட்டின் முக்கிய முஸ்லிம் அரசியல் தலைமைகளும் புத்திஜீவிகளும் பங்கேற்றிருக்கின்றனர். சுஹதாக்களின் பெயரால் அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பிரகடனங்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

சில சமயங்களில் சுஹதாக்கள் தினமேடை முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆடுகளமாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. ஷûஹதாக்களை நினைவு கூர்ந்து மலர்களும் துண்டுப் பிரசுரங்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன. இவற்றில் "சல்லடைத் தேசம்' எனும் பெயரில் சுஹதாக்கள் நிறுவனம் வெளியிட்ட ஆவணத் தொகுப்பை முக்கியமானதாகக் கொள்ளலாம்.

இதற்கப்பால் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் கிடைக்கப் பெறும் உதவிகள் அவ்வப்போது சுஹதாக்கள் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இக் குடும்பங்களுக்கு நீடித்து நிலைக்கக் கூடிய வகையில் இதுவரை எந்தவொரு குறிப்பிடத்தக்க உதவியும் வழங்கப்படவில்லை எனும் பெருங்குறைபாடு இருப்பது உண்மை.

சுஹதாக்கள் குடும்பங்களுக்காக ஒரு வீடமைப்புத் திட்டமோ, அவர்களின் பிள்ளைகளுக்கான நிலையான புலமைப்பரிசில் திட்டமோ அல்லது சுய தொழில் உதவிகளோ இதுவரை ஏற்படுத்தப்படவில்லை.
ஒரே நாளில் விதவைகளான தாய்மார்கள், தமது உறவினர்களின் உதவியுடனும் குடிசைக் கைத்தெõழில்கள் மூலமுமே குடும்பங்களை ஓட்டி வந்திருக்கின்றனர். இக் குடும்பங்களில் இன்று திருமண வயதை எட்டிய எத்தனையோ யுவதிகள் திருமணம் முடிப்பதற்கான வசதி வாய்ப்புகளின்றி அல்லல்படுகின்றனர்.

அந்த வகையில்தான், இனிவரும் காலங்களிலாவது இக் குடும்பங்களுக்கான நிலையான உதவிகள் சென்றடைவது குறித்து கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் உணரப்படுகின்றது.

இந்த நாட்டில் புலிகள் இயக்கத்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்த காலப் பகுதியில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பள்ளிவாசல் படுகொலையை முன்னிறுத்தி முஸ்லிம் தேச அரசியலில் முக்கிய காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதனை மையப் பொருளாகக் கொண்டு இலங்கையின் இன முரண்பாட்டில் சிக்குண்ட முஸ்லிம் சமூகத்தின் இழப்புக்கள் அடையாளப்படுத்தப்பட்டன. அவை அக்காலப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க பிரதிபலன்களையும் வெளிப்படுத்தியிருந்தன.

ஆனால், இன்றைய அரசியல் சூழ்நிலையிலும் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்ட நிலையிலும் "சுஹதாக்கள் தினம்' எதனை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்படல் வேண்டும் என்பநது கலந்தரையாடப்பட வேண்டிய ஒரு விடயமாகும். வெறுமனே வருடாந்தம் அனுஷ்டித்தல் என்பதற்கப்பால் ஒரு தூய்மையான இலக்கை நோக்கிய நீண்ட கால வேலைத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படல் அவசியம்.

வடக்கு கிழக்கில் புலிகளின் அச்சுறுத்தல் நிலவிய காலப் பகுதியில் சுஹதாக்களின் பெயரால் ஏதேனும் முன்னெடுப்புக்களை மேற்கொள்வதற்கு பலரும் அஞ்சியது உண்மைதான். ஷுஹதாக்கள்தின மேடைகளில் புலிகளை விமர்சித்தவர்களை பின்னாளில் புலிகள் துப்பாக்கியுடன் தேடியலைந்த வரலாறுகளும் இல்லாமலில்லை.

ஆனால் இன்றைய நிலை அப்படியல்ல. புலிகளை ஒழித்த படையினரை சுஹதாக்கள் நினைவுப் பூங்கா அருகிலேயே மேடையேற்றி கௌரவிக்கும் அளவு இன்று நிலைமை முற்றிலும் மாற்றமடைந்திருக்கிறது. எனவே இந்த சாதகமான சூழ்நிலை குறித்துச் சிந்திக்குமாறு வலியுறுத்த விரும்புகிறோம்.
இனிவரும் காலங்களிலாவது அரசியல்வாதிகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கின்ற நிறுவனமாக அல்லாமல் சுஹதாக்கள் குடும்ப நலன்களை முன்னிறுத்திப் பாடுபடுகின்ற நிறுவனமாக "முஸ்லிம் தேச சுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனம்' செயற்படும் என நம்புகிறோம்.

2010 ஆம் ஆண்டில் அனுஷ்டிக்கப்படவிருக்கின்ற 20 ஆவது ஷûஹதாக்கள் தினமாவது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் விடியலைக் கொண்டு வருவதற்கான ஒருநல்ல நாளாக அமைய வேண்டும். அந்த இலக்கை நோக்கி "சுஹதாக்கள் நிறுவனம்' நகருமா?


(பிந்திக் கடைத்த தகவல்: இந்த வருடம் சுஹதாக்கள் தின நிகழ்வுகளை பள்ளிவாயலில் மாத்திரம் நடத்துமாறும் கடைகளை மூடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் காத்தான்குடி பொலிசார் காத்தான்குடி ப.மு.நி.சம்மேளனத்திடம் வேண்டுகோள்விடுத்துள்ளனர். இதனையடுத்து 2ம் திகதி இரவு சம்மேளனம் கடைகளைத் திறக்குமாறு பள்ளிவாயல் ஒலிபெருக்கிகள் மூலமாக அறிவித்துள்ளது.

இதற்கு பொலிசார் சொன்ன காரணம்தான் விசித்திரமானது. ""உங்கள் பள்ளியில் சுட்ட புலிகள்அழிக்கப்பட்டுவிட்டார்கள். அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் அமைச்சர்களாகி விட்டார்கள். இனி எதற்கு சுஹதாக்கள் தினம்?என்று கேட்டார்களாம்.

இருப்பினும் சுஹதாகக்ள் தினத்தன்று கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. பாடசாலைகள் வழமைபோன்று நடைபெற்றன.
புலிகளை அழிக்கலாம்..புலிகள் நமக்குச் செய்த கொடூரங்களை நமது மக்களின் மனங்களில் இருந்து அழிக்கலாமா என்ன..?
கவனம்...அடுத்த வருடம் சுஹதாக்கள் தினத்துக்கு வந்து முதலாம் குறிச்சிப் பள்ளியின் சுவர்களிலுள்ள ஓட்டைகளை அடைத்து விடுங்கள் என்பார்கள்...அதையும் கேட்டு நம்மவர்கள் தலையாட்டாமல் இருந்தால் சரி..

Wednesday, July 29, 2009

பலிபீடமாக மாறிய பள்ளிவாயல்!




ஜேர்மனியில் நீதிமன்றினுள் வைத்து முஸ்லிம் பெண் ஒருவரை யூத இளைஞன் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் குறித்து சில வாரங்களுக்கு முன்னர் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
அச் சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகளிலிருந்து மீள்வதற்கிடையில், இலங்கையின் பேருவளையில் பள்ளிவாசல் ஒன்றினுள் வைத்து முஸ்லிம்களை முஸ்லிம்களே வாள்களால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் நடந்தேறியிருக்கிறது. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முனையாது கத்தியால் எதிர்கொள்ளத் துணிந்ததன் விளைவு இன்று இரு உயிர்களைப் பலியெடுத்து, 15 இற்கும் அதிகமானோரைக் காயப்படுத்தி, விலைமதிப்பிட முடியாத அல்லாஹ்வின் இல்லத்தை அடித்து நொருக்கித் தீயிட்டுக் கொளுத்தியிருக்கிறது.
காத்தான்குடி பள்ளிவாயலில் தொழுது கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டு எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதியுடன் 19 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் பேருவளை பள்ளிவாயல் படுகொலை சம்பவம் நடந்திருப்பது கவலைக்குரியது.
இலங்கை முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி முழு இலங்கைக்குமே தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கின்ற இச்சம்பவம், இந்நாட்டின் மும்மொழி ஊடகங்களிலும் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றது. அத்துடன் ஒவ்வொரு ஊடகங்களும் இதனை ஒவ்வொரு விதமாக அறிக்கையிட்டுக் கொண்டிருக்கின்றன.
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் முஸ்லிம் அரசியல் கட்சிகளிடையே அல்லது முஸ்லிம் அமைப்புகளிடையே அவ்வப் போது முரண்பாடுகள் எழுவதும் ஈற்றில் அவை வன்முறைகளில் முடிவதும் வழமையானவைதான். இருந்த போதிலும் இறுதியாக பேருவளையில் இரு தரப்பினரிடையே தோன்றிய கருத்து முரண்பாடு பள்ளிவாயலினுள் வைத்தே ஒரு சகோதரனை இன்னொரு சகோதரன் படுகொலை செய்யுமளவு பாரதூரமாக மாறியமை இதுவே முதற்தடவையாகும்.

உண்மையில் அங்கு என்னதான் நடந்தேறியது?

பேருவளை மஹகொட, மாளிகாச்சேனையில் அமைந்துள்ள "பைதுல் முபாறக் அல் முஸ்தபவிய்யா புகாரி தக்கியா'வின் 130 ஆவது வருடாந்த புகாரி கந்தூரி வைபவத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் கடந்த ஜூலை 23 ஆம் திகதி வியாழக்கிழமை குறித்த பள்ளிவாயல் வளாகத்தில் நடைபெற்றன. இந்நிகழ்வில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகைதந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இந்தப் பள்ளிவாயலுக்கு மிகச் சமீபமாகவே தற்போது தாக்குதலுக்கு இலக்கான "ஜம்இய்யதுல் அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதியா' அமைப்பினால் நிர்மாணிக்கப்பட்ட "மஸ்ஜிதுர் ரஹ்மான்' பள்ளிவாயல் அமைந்துள்ளது.
கந்தூரி நிறைவுற்ற நாளுக்கு மறுதினமான வெள்ளிக்கிழமை மஸ்ஜிதுர் ரஹ்மானில் குத்பா பிரசங்கம் நிகழ்த்திய மௌலவி ஒருவர், புகாரி தக்கியாவில் நடைபெற்ற கந்தூரி குறித்து கடுமையான தொனியில் விமர்சித்துள்ளார். இந்த விமர்சனமே குறித்த வன்முறையின் தோற்றுவாயாக அமைந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

மேற்படி குத்பா நிறைவுற்று சில மணி நேரங்களின் பின்னர் அப்பகுதியில் சலசலப்பு தோன்றியுள்ளது. இரு தரப்பினதும் ஆதரவாளர்களிடையே வாக்குவாதங்களும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 6 மணியளவில் "மஸ்ஜிதுர் ரஹ்மான்' பள்ளிவாயல் வளாகத்தினுள் பிரவேசித்த சிலர் பள்ளிவாயலுக்கு சிறியளவில் சேதத்தை விளைவித்து விட்டுச் சென்றுள்ளனர். இது குறித்து உடனடியாக பேருவளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொலிஸார் இதனை பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இச்சம்பவத்துக்குப் பின்னர் இரு தரப்பினரிடையே பதற்ற நிலை அதிகரித்துள்ளது. சிலவேளைகளில் மோதல்களும் நிகழக் கூடும் என அஞ்சிய பிரதேசவாசிகளில் சிலர் மஸ்ஜிதுர் ரஹ்மான் மற்றும் புகாரி தக்கியா முக்கியஸ்தர்களுக்கு இது குறித்து அறிவித்ததுடன் பிரச்சினையை நிதானமாகக் கையாளுமாறும் அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன் பொலிஸாருக்கும் இதன் அபாயத்தை தெரியப்படுத்தியுள்ளனர். இதன் பின்னர் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாயல் மீது தாக்குதல்கள் இடம்பெறக் கூடும் என அஞ்சியதன் காரணமாக பள்ளிவாயலைப் பாதுகாக்கும் கடமையில் சுமார் 30 இளைஞர்கள் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் குறித்த இடத்திற்கு பொலிஸார் வந்து பாதுகாப்பு அளிப்பர் என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடத்தில் இருந்தது. ஆனாலும் சனிக்கிழமை அதிகாலை 12.30 மணி வரை பொலிஸார் அங்கு வரவில்லை. வந்ததோ சுமார் 500 பேருக்கும் அதிகமான குண்டர் படைதான். கையில் கத்திகள், வாள்கள் மற்றும் சில கூரிய ஆயுதங்களுடன் மஸ்ஜிதுர் ரஹ்மானினுள் பிரவேசித்த அவர்கள் கையில் அகப்பட்ட சகலரையும் முடியுமானவரை தாக்கினர். பெரும் கூட்டத்தைக் கண்டு தப்பியோடியவர்களைத் தவிர மஸ்ஜிதுர் ரஹ்மானினுள் நின்றிருந்த சகலருமே தாக்குதலுக்கு இலக்காகினர். பள்ளிவாயலின் மலசல கூட பகுதிக்குள் ஒளிந்திருந்த முஹம்மது முஹைதீன் ( 37) முஹம்மது மாஹிர் (30 ) ஆகிய இருவரும் ஸ்தலத்திலேயே கொலை செய்யப்பட்டனர். ஏனைய 15 இற்கும் அதிகமானோர் கடுமையான வெட்டுக் காயங்களுக்கு ஆளாகினர். அத்துடன் பள்ளிவாயலின் கதவுகள், யன்னல்கள், தளபாடங்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன. பள்ளிவாயல் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 30 இற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும் துவிச்சக்கர வண்டிகளும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. பள்ளிவாயலுடன் இணைந்ததாக அமைந்துள்ள குர்ஆன் மத்ரஸாவும் மருத்துவ நிலையம் ஒன்றும் இதன்போது சேதமாக்கப்பட்டன.
இச்சம்பவத்தில் மரணமடைந்த இருவரினதும் ஜனாஸாக்கள் சனிக்கிழமை மாலை நல்லடக்கம் செய்யப்பட்டன. ஜனாஸா நல்லடக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.இதன்பின்னர் நல்லடக்கத்தில் கலந்துகொண்டோர் பேருவளை பொலிஸ் நிலையம் நோக்கி ஊர்வலமாகச் சென்றதுடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய சகலரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கோஷமெழுப்பினர்.இதனையடுத்து அங்கு மீண்டும் பதற்ற நிலை தோன்றியதால் மஹாகொடை மற்றும் மாளிகாச்சேனை பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. பிரதேசத்தின் பாதுகாப்பு கருதி மறுநாள் ஞாயிற்றுக் கிழமை காலையும் பொலிசார் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்தனர்.
இதற்கிடையில் இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பலரை பொலிசார் கைது செய்தனர். சனிக்கிழமை காலை பேருவளை பகுதியிலிருந்து காலி பயணித்துக் கொண்டிருந்த லொறி ஒன்றைத் தடுத்து நிறுத்திய பொலிசார் அதிலிருந்த 28 பேரை கைது செய்தனர். இறுதியாக இந்தக் கட்டுரை எழுதப்படும் வரை 131 பேர் கைது செய்யப்பட்டு களுத்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.இவர்களை எதிர்வரும் ஆகஸ்ட் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில் இச்சம்பவம் குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பேருவளை புகாரி தக்கியா நிருவாகத்தினர் மேற்படி பிரச்சினையை தூண்டிய மௌலவி குறித்து தாம் பொலிசில் முறைப்பாடு செய்ததாகவும் பொலிசார் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதனாலேயே மக்கள் கொந்தளித்து வன்முறையில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
"மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாயலில் குத்பா பிரசங்கம் நிகழ்த்திய மௌலவி மக்களின் மனம் புண்படும்படி பேசினார். இது தொடர்பாக தக்கியாவைச் சேர்ந்த மௌலவிமாரும் சட்டத்தரணிகளும் பொலிசில் முறைப்பாடு செய்தனர். இதனையடுத்து குறித்த மௌலவியை இரண்டு மணித்தியாலங்களுக்குள் பொலிசில் ஒப்படைப்பதாக மஸ்ஜிதுர் ரஹ்மான் நிருவாகிகள் உறுதியளித்தனர். இருப்பினும் இது நடக்காததால் ஆவேசமடைந்த மக்கள் மஸ்ஜிதுர் ரஹ்மானை நோக்கிச் சென்றனர். அங்கு இரு தரப்பினரிடையேயும் கைகலப்பு நடந்தது.'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எது எப்படியிருப்பினும் மார்க்கத்தின் பெயரால் எழுந்த முரண்பாடு முழு முஸ்லிம் சமூகத்தையுமே வெட்கித் தலைகுனியச் செய்யுமளவு வன்முறையில் முடிந்திருக்கிறது.மார்க்க விவகாரங்கள் மற்றும் தஃவா பிரசாரங்கள் தொடர்பில் போதிய கள அனுபவமும் தெளிவான சிந்தனையுமற்றவர்களாலேயே நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அடிக்கடி மார்க்க முரண்பாடுகள் தோற்றம் பெறுவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.இவ்வாறானதொரு அகோரம் நிகழ்ந்தேறிய பின்னரும் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் மார்க்கத்தின் பெயரால் பிளவுகளும் சண்டை சச்சரவுகளும் நிகழ்ந்தேறுவது அழகல்ல. அது நாம் பின்பற்றும் மார்க்கம் நமக்குக் காட்டித் தந்த வழிமுறையுமல்ல.

Monday, July 20, 2009

நம்ம 'தலைவரின்' விளையாட்டைப் பாருங்கோ...



Hakeem pulls out a trick to bag billiards title

By M.Shamil Amit

Member of Parliament, Sri Lanka Muslim Congress and Moors Sports Club member Rauf Hakeem clinched the Colombo District billiards title when he defeated his club mate A.H. Manoorjan in a close tussle in the final of the Colombo District Billiards Championship played at the Billiards and Snooker Association billiards table in Reid Avenue yesterday.
Hakeem who is participating in the Colombo district billiards tournament for the first time was in fine form as he kept his confidence and used his experience of his early round robin victories to overcome Manoorjan in a closely fought contest by 176 points to 153 in the one hour timing contest.
The Colombo district tournament is held along with tournaments in Kandy and Galle districts, in preparation for the forthcoming billiards nationals. After the completion of the district tournaments the Billiards and Snooker Association will conduct the All Island Lanka Plate which is scheduled to be played from July 22 to 25.
The All Lanka Plate will be contested by 38 cueists comprising 16 from Colombo district, eight each from Kandy and Galle along with the six players relegated cueists from the national championship of last year.
The billiards nationals are due to get underway from July 29 onwards with the final slotted to be played on August 6.
Results:
Quarter Finals – Rauf Hakeem (MSC) beat K.W.A. Ratnasiri (YMBA) (158/104). N.M. Shamil (RSS) beat O.Sirajudeen (YMBA) (194/178). A.N. Manoorjan (MSC) beat A.N. Mohamed (AAC) (190/101). Pawan Santani (OAC) beat W.M. Naushad (The Cue) (203/137).
Semi Finals – Rauf Hakeem (MSC) beat N.M. Shamil (RSS) (153/129). A.H. Manoorjan (MSC) beat Pawan Santani (OAC) (198/156).
Final – Rauf Hakeem (MSC) beat A.H. Manoorjan (MSC) (176/153).
Third place play off – Pawan Santani (OAC) beat N.M. Shamil (RSS) (84/10).
Courtsey: Dailymirror

Wednesday, July 15, 2009

மர்வா அல் ஷெர்பினி: 'நீதி'யின் முன் 'அநீதி'யிழைக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்!


நீதிமன்றில்....
நீதிபதிகள் பார்த்திருக்க...
அன்புக் கணவருக்கும் மூன்றே வயது மகனுக்கும் முன்னால்...
ஒரு கர்ப்பிணித்தாய் 18 தடவைகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா....?


இது ஒன்றும் "ஜாஹிலிய்யாக்' காலத்தில் மனிதப் பண்புகள் வளர்ச்சியுற்றிராத ஒரு தேசத்தில் நடைபெற்ற சம்பவமல்ல. சரியாக பதினைந்து நாட்களுக்கு முன் (ஜூலை 01) ஜேர்மனியின் "ட்ரெஸ்டன்' நகரிலுள்ள நீதிமன்றில் நடந்தேறிய "அசிங்கம்'தான் இது.

"மர்வா அல் ஷெர்பினி' எனும் 32 வயதேயான கர்ப்பிணித் தாய்தான் இவ்வாறு அநியாயமாகக் கொல்லப்பட்டார். ஐந்து வருடங்களுக்கு முன்னர்தான் "எல்வி அலி ஓகாஸ்' எனும் இளைஞரைக் கரம்பிடித்தார். ஓகாஸ் ஒரு பொறியியலாளர். ஷெர்பினி "மருந்தாளர்' துறையில் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். இவர்களுக்கு முஸ்தபா எனும் பெயரில் மூன்று வயதில் ஒரு மகனும் இருக்கிறான்.

துருக்கியைச் சேர்ந்த இத்தம்பதியர் 3 வருடங்களுக்கு முன்னர்தான் ஜேர்மனியில் குடியேறினார்கள்.2008ஆம் ஆண்டு ஷெர்பினி தனது மகன் முஸ்தபாவுடன் வீதியில் நடந்து போய்க் கொண்டிருந்தார். அப்போது "அலெக்ஸ்' எனும் 28 வயது இளைஞன் ஷெர்பினியைப் பார்த்து "தீவிரவாதி' என அழைத்ததுடன் மிக மோசமான தூஷண வார்த்தை ஒன்றையும் பிரயோகித்துள்ளான்.ஷெர்பினி இஸ்லாமிய முறையில், ஹிஜாப் அணிந்திருந்ததே இவ்வாறு தூற்றப்படக் காரணமாகும்.

தன்னையும், தான் பின்பற்றும் மார்க்கத்தையும் தூற்றியமையால் ஆத்திரமுற்ற ஷெர்பினி "ட்ரெஸ்டன்' நகரிலுள்ள நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த ஜூலை முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதி அலெக்சுக்கு 780 யூரோ பணத்தை தண்டமாக விதித்தார். அப்போதுதான் அந்த அகோரச் சம்பவம் நடந்தேறியது.

திடீரெனப் பாய்ந்து வந்த அலெக்ஸ் தனது ஆடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை உருவி மூன்று மாதக் கர்ப்பிணியான ஷெர்பினியின் வயிற்றில் 18 தடவைகள் குத்தினான்.நீதிபதிகளும் நீதிமன்றக் காவலர்களும் பார்த்திருக்கவே இச்சம்பவம் நடந்தேறியது. அச்சமயம் அலெக்ஸை சுட்டுத் தள்ள வேண்டிய பொலிசாரோ தனது மனைவியைக் காப்பாற்ற முயன்ற ஓகாஸ் மீதே துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பலத்த காயமடைந்த ஓகாஸ் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்பாவித் தாயான ஷெர்பினி நீதிமன்றத்தில் வைத்தே உயிர் துறந்தார். ஷெர்பினி மட்டுமல்ல அவர் வயிற்றில் சுமந்திருந்த மூன்று மாதக் கருவும் அங்கு உயிர் துறந்தது.மூன்றே வயதான மகனான முஸ்தபா முன்னிலையிலேயே அவனது தாய் உயிரைத் துறந்தார். தந்தை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

"தீவிரவாதம்', "பயங்கரவாதம்', "மனித உரிமை' பற்றி அதிகம் கொக்கரிக்கும் மேற்குலகில் நடந்த இச்சம்பவம் முழு உலகையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக எகிப்தியர்களை பெரிதும் கொதிப்படையச் செய்துள்ளது.தனது மார்க்கத்திற்காக அதன்படி தனதுடலை மறைத்து வாழ்ந்தமைக்காக உயிர் துறந்த மர்வா அல் ஷெர்பினியின் ஜனாஸா நல்லடக்கம் கடந்த 6ஆம் திகதி எகிப்தின் அலெக்ஸாண்டிரா நகரில் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான எகிப்தியர்கள் கலந்து கொண்ட இந் நல்லடக்க நிகழ்வில் ஜேர்மனுக்கும் யூதர்களுக்கும் எதிரான கோஷங்கள் வானைப் பிளந்தன. இஸ்லாத்திற்காக தன்னுயிர் நீத்த மர்வாவுக்கு ஆதரவாக இன்று சர்வதேச நாடுகள் பலவற்றிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. "ஹிஜாபுக்காக ஷஹீதான பெண்' என இவரை முஸ்லிம் உலகில் பலரும் வர்ணித்துள்ளனர். அத்துடன் எகிப்திலுள்ள அலெக்சாந்திரா நகர வீதி ஒன்றுக்கு மர்வாவின் பெயரை சூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆனால் துரதிஷ்டவசமாக மேற்குலக ஊடகங்கள் மர்வாவின் கொலையை மூடி மறைத்து விட்டன.இச்சம்பவம் குறித்து உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான எந்தவொரு அறிக்கையிடலையும் மேற்குலக ஊடகங்கள் செய்யவில்லை. இதுகுறித்து கருத்து வெளியிட்டிருக்கும் துருக்கியின் அல்சுகூர் தினசரியின் ஆசிரியர் அப்துல் அஸீம் ஹம்மாத் ஒரு யூதர் இவ்வாறு கொல்லப்பட்டிருந்தால் மேற்கு ஊடகங்கள் அதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதிருந்திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மர்வாவின் படுகொலை குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொண்டு கொலைகாரனான அலெக்சுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என மர்வாவின் சகோதரர் தாரிக் அல் ஷெர்பினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.அத்துடன் கடந்த இச்சம்பவம் குறித்து ஜேர்மன் அரசு உரியவிசாரணைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என கண்டனம் வெளியிட்டுள்ள ஈரானிய தலைமை நீதிபதி ஆயத்துல்லாஹ் மஹ்மூத் சரோதி இச்சம்பவத்தின்போது நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்த அனைவரும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்

இச்சம்பவம் பற்றி ஜேர்மன் அரசு இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தவொரு தகவல்களையும் வெளியிடவில்லை என எகிப்திய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர.

அண்மையில் பிரான்சில் 'புர்கா' எனும் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடையைத் தடை செய்வது குறித்து நிகலஸ் சார்கோஸி வெளியிட்ட கருத்து ஊடகங்களில் பெரும் கவனயீர்ப்பைப் பெற்றிருந்தது. சார்கோசியின் இந்த வெறுப்பேற்றும் கருத்து அலெக்ஸின் கொலை வெறிக்குப் பின்னணிக் காரணமாக அமைந்திருக்க முடியும் எனவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இஸ்லாத்துக்கெதிராக மேற்குலக ஊடகங்கள் திட்டமிட்டு மேற்கொண்டுவரும் இவ்வாறான பிரச்சாரங்களே முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதற்கான காரணம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

முஸ்லிம் தீவிரவாதி, முஸ்லிம் பயங்கரவாதி...போன்ற ஊடகங்களின் வார்த்தைப் பிரயோகங்கள்தான் அலெக்ஸ் போன்றவர்களை மூளைச்சலவை செய்கின்றன.உண்மையில் இவ்வாறான ஊடகங்கள் தமது கருத்துநிலை குறித்து ஒருகணம் சிந்திப்பதற்கு மர்வாவின் கொலை ஒரு நல்ல உதாரணம் எனலாம்.

உண்மையாகவே தான் அவமானப்படுத்தப்பட்டமைக்காக வன்முறைகளைக் கையாளாமல் நீதிமன்றத்தை நாடிய மர்வா தீவிரவாதியா? அல்லது நீதிபதியின் தீர்ப்பினால் கோபமுற்று ஓர் கர்ப்பிணித்தாயையே ஈவிரக்கமின்றி கொலை செய்த அலெக்ஸ் தீவிரவாதியா?

ஒரு பெண் கண்முன்னால் கொல்லப்படுகையில் அவளை காப்பாற்ற முனையாது வேடிக்கை பார்த்த ஜேர்மனிய பொலிசாரையும் நீதிபதிகளையும் இந்த ஊடகங்கள் எவ்வாறு வர்ணிக்கப்போகின்றன?

ஒரு கொலைகாரனின் கையில் அகப்பட்ட தனது மனைவியைக் காப்பாற்றுவதற்கான உரிமையைக் கூட வாங்காத ஜேர்மனின் "மனித உரிமை'யின் லட்சணம் இதுதானா?

மேற்குலகு முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்கின்ற இந்த நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க நாகரிகம் எனும் பேர்வையில் ஹிஜாபைக் கழற்றி எறிந்து விட்டு நடைபயிலும் "முஸ்லிம்' பெண்மணிகளே...உங்கள் எல்லோருக்கும் ஷஹீத் மர்வா அல் ஷெர்பினியின் தியாகம் உறைக்கிறதா என்ன?

Sunday, July 12, 2009

பயப்படாதீங்க..சும்மா விளையாட்டுத்தான்..

An ethnic Uighur girl point her toy pistol at another boy in a Muslim Uighur neighbourhood of Urumqi in. China's Xinjiang Autonomous Region July 10, 2009. Security forces have imposed control over Urumqi, but the afternoon prayers on Friday were testing the government's ability to contain Uighur anger after Han Chinese, China's predominant ethnic group, attacked Uighur neighbourhoods on Tuesday (Reuturs)

Thursday, July 9, 2009

எங்களைக் காப்பாற்றுங்கள்...


சீனாவில் சிறுபான்மையாக வாழ்கின்ற 'உய்கர்' இன முஸ்லிம்கள் மீது சீனாவிள் 'ஹான்' இனத்தவர் கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறைகளில் இது வரை சுமார் 200 முஸ்லிம்கள் வரை உயிரிழந்திருக்கிறார்கள்.எங்களைக் காப்பாற்ற யாருமே இல்லையா எனக் கேட்கும் உய்கர் மக்களின் அழுகுரல் முஸ்லிம் நாடுகளின் காதுகளில் விழுந்ததாக இதுவரை தெரியவில்லை.

A young Turk holds a poster made of a photo of the recent killings in Urumqi, the capital of China's Uighur region, during a protest near the Chinese embassy in Ankara, Turkey, Wednesday, July 8, 2009

A Uighur woman alerts a Uighur neighborhood for an alleged attack by Han Chinese in Urumqi, China, Wednesday, July 8, 2009.


Chinese soldiers are seen inside the Grand Bazaar in the Uighur area of the city of Urumqi in China's far west Xinjiang province on July 8, 2009


A Uighur woman cries as reporters visit a Uighur district which protested on Monday in Urumqi, western China's Xinjiang province, Thursday, July 9,




A Uighur protestor shout slogans against China as he takes part in a demonstration condemning the violence in China's Xinjian Uighur region